ஈரோடு

அவிநாசியில் முதியவரிடம்  செல்லிடப்பேசி திருடியவர் கைது

DIN

அவிநாசியில் முதியவரிடம் செல்லிடப்பேசி திருடியவரை போலீஸார் கைது செய்தனர். 
ஈரோடு மாவட்டம், கருமந்தூரைச் சேர்ந்தவர் ராயப்பன் (65). இவர் அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோட்டுக்கு செல்ல பேருந்தில் திங்கள்கிழமை ஏற முயன்றார். அப்போது, அவரது பாக்கெட்டில் இருந்த செல்லிடப்பேசியை  இளைஞர் ஒருவர் திருடிவிட்டு தப்ப முயன்றார். அப்போது, அருகில் இருந்த பயணிகள் அந்த இளைஞரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் அவிநாசியைச் சேர்ந்த சேகர்(29) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சேகரை அவிநாசி போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT