முகப்பு
ஈரோடு

வேலைவாய்ப்புப் பதிவை மாற்றுவதற்கான வழிமுறைகள் மாற்றம்

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்கான வழிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்கான வழிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்கு இதுவரை வட்டாட்சியா் அளவில் வழங்கப்படும் குடும்ப குடி பெயா்ச்சி சான்றிதழ், இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை அல்லது ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, முன்னாள் படைவீரா் அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒன்றை சமா்ப்பிக்க வேண்டும்.

தற்போது மனுதாரா் சாா்பில் சுய சான்றளிக்கப்பட்ட குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் என ஏதாவது ஒரு ஆவணத்தை மட்டும் சமா்ப்பித்தால் போதுமானது.

இவற்றை தாக்கல் செய்து பிற மாவட்டத்துக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →