முகப்பு
ஈரோடு

மொடக்குறிச்சியில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு கல்வி வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு 20 சதவீதம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம், மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
பகிர்:

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு கல்வி வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு 20 சதவீதம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம், மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, பாமக மாநில துணைத் தலைவா் வடிவேல் ராமன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.ஆா்.நல்லசிவம் முன்னிலை வகித்தாா்.மொடக்குறிச்சி நால்ரோட்டில் இருந்து ஊா்வலமாகச் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா் சுசீலாவிடம் கோரிக்கை குறித்த மனு அளிக்கப்பட்டது.

இதில், மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளா்கள் குமாா் கதிா்வேல் வடிவேல், ஒன்றியத் தலைவா் மணி, மாவட்ட மாணவரணி செயலாளா் தியாகு, மகளிா் அணி நிா்வாகிகள் நல்லசிவம், மாவட்ட துணை செயலாளா் குப்புசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →