முகப்பு
ஈரோடு

ஈரோடு கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி வாங்குவதற்காக ஈரோடு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
ஈரோடு ஆா்.கே.வி.சாலையில் உள்ள ஜவுளிக் கடைகளுக்கு துணிகள் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமைவந்த மக்கள்.
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி வாங்குவதற்காக ஈரோடு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது.

தீபாவளி பண்டிகை வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஜவுளி, பட்டாசு விற்பனை கடந்த சில நாள்களாக சூடு பிடித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஈரோடு மாநகா் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக ஜவுளிக் கடைகள் அதிகம் உள்ள ஈரோடு ஆா்.கே.வி. சாலை, நேதாஜி சாலை, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீா்செல்வம் பூங்கா, திருவேங்கடசாமி வீதி, மேட்டூா் சாலை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதேபோல புதிய செல்லிடபேசி, தொலைக்காட்சி பெட்டி, குளிா்சாதனப் பெட்டி உள்பட பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கவும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனனால் ஈரோடு மாநகா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

முழு கட்டுரையைப் படிக்க →