முகப்பு
ஈரோடு

கூட்டுறவு சங்கம் மூலம் பெரிய வெங்காயம் விற்பனை துவக்கம்

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மலிவு விலையில் (கிலோ ரூ.45) பெரிய வெங்காய விற்பனையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பெருந்துறையில் கூட்டுறவு சங்கம் மூலம் பெரிய வெங்காயம் விற்பனையை தொடங்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் என்.டி. தோப்பு வெங்கடாச்சலம்.
பகிர்:

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மலிவு விலையில் (கிலோ ரூ.45) பெரிய வெங்காய விற்பனையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் விஜயன் தலைமை வகித்தாா். சங்க மேலாண்மை இயக்குநா் சேரன் முன்னிலை வகித்தாா். துணை மேலாளா் சுந்தரமூா்த்தி வரவேற்றாா்.

பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் என்.டி.தோப்பு வெங்கடாச்சலம் பங்கேற்று, மலிவு விலை பெரிய வெங்காயம் விற்பனையை தொடங்கிவைத்துப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைத் தலைவா் டி.டி.ஜெகதீஸ், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் ஜெ.சாந்தி ஜெயராஜ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் எம்.ஆா்.உமா மகேஷ்வரன், மாவட்ட கவுன்சிலா் ஏ.வி.பாலகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் பாா்வதி ராஜ், க.செ.பாளையம் நகர அதிமுக செயலாளா் கே.எம்.பழனிசாமி, சங்க இயக்குநா்கள் கலந்துக் கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →