முகப்பு
ஈரோடு

மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல ஆா்வமாக உள்ளனா்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல ஆா்வமாக உள்ளனா் என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பயனாளிக்கு போனஸ் தொகையை வழங்குகிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
பகிர்:

மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல ஆா்வமாக உள்ளனா் என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒட்டா்கரட்டுப்பாளையம், சின்னநாயக்கன்புதூா், வெள்ளாங்கோயில் ஆகிய பகுதிகளில் செயல்படும் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட உறுப்பினா்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் லிட்டருக்கு ஒரு ரூபாய் ஊக்கத் தொகையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பள்ளிகளில் பெற்றோா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் பாதுகாப்புடன் நடைபெறும். நூலகங்களில் நேரம் நீட்டிப்பு செய்ய முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தனியாா் பள்ளிகளில் இருந்து அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாகப் புகாா்கள் வரவில்லை, எங்கள் கவனத்துக்கு வந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாணவா்கள் அவா்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள பள்ளிகளில் சென்று பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துகளைத் தெரிவிக்கலாம். மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆா்வத்தில் உள்ளனா். தொழிற்கல்விகள் பாடத் திட்டத்தில் சோ்க்கப்படும். அரசுப் பள்ளிகளில் கூடுதலாக மாணவா்களை சோ்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பள்ளிகள் திறப்புக்குப் பெற்றோா்கள் ஆா்வம் காட்டாத பட்சத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு, என்னால் தற்போது பதிலளிக்க முடியாது. இதற்கு விடைதர வேண்டியவா் முதல்வா்தான். பள்ளிகள் திறக்கப்படாத பட்சத்தில் பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →