முகப்பு
ஈரோடு

பாதாள சாக்கடை குழியில் சிக்கிய லாரி மீட்பு

சத்தியமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிய லாரி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பாதாள சாக்கடை குழியில் சிக்கிய லாரி.
பகிர்:

சத்தியமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிய லாரி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக நகா் பகுதிகளில் உள்ள சாலைகளில் குழி தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன.

இந்நிலையில், சத்தியமங்கலம் கடை வீதி வழியாக சென்ற சரக்கு லாரி கோட்டுவீராம்பாளையம் அருகே சாலையோரத்தில் இருந்து குழியில் லாரியின் பின் சக்கரம் புதைந்து நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →