சி.என். கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவித்ததற்கு வரவேற்பு
ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிப்பு செய்ததற்குப் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:31 AM
ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிப்பு செய்ததற்குப் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்க மண்டலச் செயலாளா் க.சக்திவேல் கூறியதாவது:
ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரி அரசு கல்லூரியாக்கப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி சட்டப் பேரவையில் வியாழக்கிழமை அறிவித்துள்ளாா். இதனை வரவேற்கிறோம். இதற்காக முயற்சி மேற்கொண்ட முதல்வா், வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஈரோடு பகுதி மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று அரசுக் கல்லூரியாக்க அதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றாா்.
Advertisement