முகப்பு
தமிழ்நாடு

கடலூரில் விஜய்யின் பிரசாரம் ரத்து ஏன்?

கடலூரில் தவெக தலைவர் விஜய்யின் தலைமையில் நாளை நடைபெறவிருந்த பிரசாரம் ரத்து

Updated On : 18 ஏப்ரல் 2026, 12:10 pm IST
தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

கடலூரில் தவெக தலைவர் விஜய்யின் தலைமையில் நடைபெறவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், கடலூரில் தவெக தலைவர் விஜய்யின் தலைமையில் நடைபெறவிருந்த பிரசாரம், தொடர்ந்து மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கடலூரில் ஏப்ரல் 19-ல் நடைபெறவிருந்த தவெகவின் தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விஜய்யின் சாலை வலத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனையடுத்து, கடலூரில் விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. ஏற்கெனவே ஏப்ரல் 9, 11 ஆகிய தேதிகளிலும் விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Why was TVK Vijay's campaign in Cuddalore cancelled?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.