கடலூரில் விஜய்யின் பிரசாரம் ரத்து ஏன்?
கடலூரில் தவெக தலைவர் விஜய்யின் தலைமையில் நாளை நடைபெறவிருந்த பிரசாரம் ரத்து
கடலூரில் தவெக தலைவர் விஜய்யின் தலைமையில் நடைபெறவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், கடலூரில் தவெக தலைவர் விஜய்யின் தலைமையில் நடைபெறவிருந்த பிரசாரம், தொடர்ந்து மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கடலூரில் ஏப்ரல் 19-ல் நடைபெறவிருந்த தவெகவின் தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விஜய்யின் சாலை வலத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனையடுத்து, கடலூரில் விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. ஏற்கெனவே ஏப்ரல் 9, 11 ஆகிய தேதிகளிலும் விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Why was TVK Vijay's campaign in Cuddalore cancelled?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.