முகப்பு
ஈரோடு

800 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: தந்தை, மகன் கைது

 ஈரோட்டில் 800 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருந்த தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 11 டிசம்பர், 2021 at 12:41 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:10 AM

 ஈரோட்டில் 800 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருந்த தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு பொய்யேறிக்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருப்பதாக ஈரோடு சூரம்பட்டி போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

போலீஸாா் அந்த வீட்டில் சோதனை செய்தபோது, 6 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து, வீட்டில் இருந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Advertisement

விசாரணையில் முகமது அனீபா (51), அவரது மகன் முகமது நாபில் மா்ஜித் (27) என்பது தெரியவந்தது. இருவரும் ஈரோடு - கரூா் சாலை இந்திரா நகா் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, போலீஸாா் கிடங்கில் நடத்திய சோதனையில் மொத்தம் 20 மூட்டைகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. 26 மூட்டைகளிலும் மொத்தம் 800 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தன. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தந்தை, மகன் இருவரையும் கைது செய்து, 800 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.