கேரட், பீட்ரூட் அடை
அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். கேரட், பீட்ரூட் இரண்டையும் துருவிக் கொண்டு ஊறிய அரிசியுடன் சேர்த்து மேலும் தேங்காய்த் துருவல், சீரகம், காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து அடைமாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி- ஒரு கிலோ
கேரட் , பீட்ரூட் - தலா 200 கிராம்
Advertisement
தேங்காய்த் துருவல் - ஒரு கிண்ணம்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
காய்ந்த மிளகாய்- 10
சீரகம்- 2 தேக்கரண்டி
செய்முறை:
அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். கேரட், பீட்ரூட் இரண்டையும் துருவிக் கொண்டு ஊறிய அரிசியுடன் சேர்த்து மேலும் தேங்காய்த் துருவல், சீரகம், காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து அடைமாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். இரண்டு மணி நேரம் கழித்து அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் தேவையான எண்ணெய் விட்டு மாவை அடைகளாக வார்த்து எடுக்கவும்.