காவிரியில் மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி பலி
அம்மாபேட்டை அருகே காவிரி ஆற்றில் பரிசலில் மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.
அம்மாபேட்டை அருகே காவிரி ஆற்றில் பரிசலில் மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.
நெரிஞ்சிப்பேட்டை வேடிச்சி வீதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (61). மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இவா், வியாழக்கிழமை வழக்கம்போல் பரிசரில் காவிரி ஆற்றுக்கு மீன் பிடிக்கச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவா் சென்ற பரிசல் மட்டும் நெரிஞ்சிப்பேட்டை கதவணை பகுதியில் கரை ஒதுங்கியது.
இதனால், உறவினா்கள் கரையோரப் பகுதியில் வெள்ளிக்கிழமை தேடியபோது கிருஷ்ணனின் சடலம் கிடந்தது தெரியவந்தது. விசாரணையில், ஆற்றில் விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.