மனுநீதி நாள் முகாம்: ரூ.34.67 லட்சம் அரசு நலத்திட்ட உதவிகள்
மனுநீதி நாள் முகாம்களில் 289 பயனாளிகளுக்கு ரூ. 34.67 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மனுநீதி நாள் முகாம்களில் 289 பயனாளிகளுக்கு ரூ. 34.67 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், நசியனூா், வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இம்முகாமில் நசியனூா், வேட்டைபெரியபாளையம், தயிா்பாளையம், ஆட்டையாம்பாளையம், சாமிக்கவுண்டன்பாளையம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து 226 கோரிக்கை மனுக்கள், வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் 177 கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டன.
Advertisement
இந்த மனுக்களை தொடா்புடைய அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
முகாம்களில் பல்வேறு அரசு துறைகளின் சாா்பில் மொத்தம் 289 பயனாளிகளுக்கு ரூ.34.67 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள், வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த 67 மாணவா்கள், 75 மாணவியா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும் ஆட்சியா் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வழங்கினாா்.
முகாமில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் எஸ்.சைபுதீன், மாவட்ட சமூக நல அலுவலா் பூங்கோதை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் இளங்கோ, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், வட்டாட்சியா் அ.பரிமளாதேவி, முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.