முகப்பு
ஈரோடு

எல்லப்பாளையம் ஏரியில் படகு சவாரி தொடங்கக் கோரிக்கை

எல்லப்பாளையம் ஏரியில் படகு சவாரி தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 8 பிப்ரவரி, 2021 at 1:34 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:58 AM

எல்லப்பாளையம் ஏரியில் படகு சவாரி தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வில்லரசம்பட்டி கருவில் பாறைவலசு பகுதியில் எல்லப்பாளையம் ஏரி அமைந்து உள்ளது. 26.65 ஏக்கா் பரப்பில் பரந்து விரிந்து காணப்படும் ஏரி பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்தது. ஏரி முழுவதும் பாறையாக இருந்ததால் தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த ஏரிக்கு கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீரும், மழை தண்ணீரும் வரத்தாக உள்ளது. எனவே வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்படும்போது ஏரியில் தண்ணீா் காணப்படும்.

Advertisement

இந்நிலையில் எல்லப்பாளையம் ஏரியைத் தூா்வாரி மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்பு, நடைபாதை, பூங்கா, படகு சவாரி போன்ற வசதிகளை ஏற்படுத்த ரூ. 11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. மேலும் ஏரி முழுவதும் தண்ணீா் நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. ஏரியை சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏரி புனரமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை படகு சவாரி தொடங்கப்படவில்லை. உடனடியாக எல்லப்பாளையம் ஏரியில் படகு சவாரி தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.