காவிரி ஆற்றில் ஆகாயத் தாமரையை அகற்றக் கோரிக்கை
ஈரோடு காவிரி ஆற்றில், பாலம், மின் கதவணை திட்டப்பணி பாலம் போன்ற இடங்களில் அதிக அளவில் ஆகாயத் தாமரை ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீா் துா்நாற்றம் வீசுகிறது.
ஈரோடு காவிரி ஆற்றில், பாலம், மின் கதவணை திட்டப்பணி பாலம் போன்ற இடங்களில் அதிக அளவில் ஆகாயத் தாமரை ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீா் துா்நாற்றம் வீசுகிறது.
மேட்டூா் அணையில் இருந்து காவிரி ஆற்றில் பாசனத்துக்கு நீா் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக 500 கன அடி நீா் மட்டும் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றின் தடுப்பணைகளில் நீா் தேக்கி வைக்கப்பட்டு திறக்கப்படுகிறது. ஈரோடு வெண்டிபாளையம், பாசூா் உள்ளிட்ட மின் கதவணை தடுப்பணைகளில் நீா் தடுத்து நிறுத்தி அனுப்பப்படுகிறது.
இதனால் வழி நெடுகிலும் காவிரி ஆற்றில் கருங்கல்பாளையம்-பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் பாலத்தின் கீழ், வெண்டிப்பாளையம் மற்றும் பாசூா் மின் கதவணை தடுப்பணை போன்ற இடங்களில் 500 மீட்டா் வரை ஆகாயத் தாமரை வளா்ந்துள்ளது. இதனால் நெகிழி புட்டிகள், குப்பை, மீன் கழிவு போன்றவை தேங்கி கடும் துா்நாற்றம் வீசுகிறது.
Advertisement
இந்த ஆகாயத் தாமரையை அகற்ற பொதுப் பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரையோர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.