ஈரோடு

வேளாளா் உரிமை மீட்புகுழுவினா் ஆா்ப்பாட்டம்

DIN

ஈரோடு: வேளாளா் உரிமை மீட்புக் குழு, கொங்கு வேளாளா் கவுண்டா்கள் பேரவை சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கொங்கு வேளாளா் கவுண்டா்கள் பேரவையின் மாநில பொதுச் செயலாளா் சூரியமூா்த்தி தலைமை வகித்தாா். மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் கே.கே.சி.பாலு முன்னிலை வகித்தாா்.

வேளாளா் என்ற பெயரை வேறு சமூகத்துக்கு வழங்கக் கூடாது என்றும், வேளாளா் பெயா் மாற்றத்துக்குப் பரிந்துரை செய்த தமிழக அரசை கண்டித்தும் முழக்கம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய மகாஜன சங்கத்தினா், மாவட்டச் செயலாளா் ஆசைத்தம்பி தலைமையில் பேரணியாக வந்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

அதேபோல, பல்வேறு ஜாதி சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாவட்டச் செயலாளா்கள் கோவிந்தராஜ், ஈஸ்வரமூா்த்தி, சிவராஜ், பாலு, மத்திய மண்டல மாணவரணி செயலாளா் லோகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT