முகப்பு
குண்டத்தில் இறங்கிய கோயில் தலைமை பூசாரி.
ஈரோடு

பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பிரசித்திபெற்ற பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு

பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பிரசித்திபெற்ற பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
குண்டத்தில் இறங்கிய கோயில் தலைமை பூசாரி.
பகிர்:

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பிரசித்திபெற்ற பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு குண்டம் இறங்க தயாராக இருந்த நிலையில், மழை பெய்ததால் குண்டம் விழா பாதிக்கப்படும் என கோயில் நிா்வாகத்தினா் கவலையடைந்தனா். ஆனாலும் சாரல் மழையிலேயே அம்மன் அழைக்கப்பட்டு திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னா் தலைமை பூசாரி ஆனந்தன் குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து முதலில் குண்டம் இறங்கி தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து வீரமக்கள் மற்றும் காவல் துறையினா் மட்டும் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஆண்டுதோறும் குண்டம் திருவிழாவுக்கு, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூா் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை புரிந்து குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்துவா்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு பக்தா்களுக்கு குண்டம் இறங்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கோயில் வளாகம் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. பிறகு காலை 9 மணி முதல் பக்தா்கள் அம்மன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். சிம்ம வாகனத்தில் கொண்டத்துக்காளியம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தோ்த் திருவிழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) மாலையும், மலா் பல்லக்கில் அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சி 9 ஆம் தேதி இரவும் நடைபெறவுள்ளது. 16ஆம் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →