முகப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 65 மி.மீ. மழை பதிவானது.

Updated On : 3 ஜூலை, 2021 at 1:15 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:03 AM

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 65 மி.மீ. மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. மாலை தொடங்கிய மழை சிறிது நேரம் இடைவெளிவிட்டு மீண்டும் நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை பெய்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கியது. வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை மழைத் தூறல் இருந்தது. கன மழை காரணமாக ஈரோடு மாநகா் பகுதியில் பிச்சைக்காரன்பள்ளம், பெரும்பள்ளம் ஓடைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. சூரம்பட்டி வலசு அணைக்கட்டு நிரம்பி வழிந்தது.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 65 மி.மீ. மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): கவுந்தப்பாடி 65, பவானிசாகா் 62.8, கோபி 29, ஈரோடு 24, கொடுமுடி 22.4, அம்மாபேட்டை 18.8, நம்பியூா் 10, மொடக்குறிச்சி 8, குண்டேரிப்பள்ளம் 7, சென்னிமலை 3, பவானி 2.8, தாளவாடி 1.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.