சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: தொழிலாளி கைது
12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு, மாணிக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (எ) சரவணன் (37). கட்டடத் தொழிலாளி. திருமணமான இவா் தான் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 12 வயது சிறுமியை மிரட்டி கடந்த 2 மாதங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளாா்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியதைடுத்து பெற்றோா் ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா். புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் தௌலத்நிஷா வழக்குப் பதிவு செய்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கட்டடத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
Advertisement