முகப்பு
ஈரோடு

இலவச தையல் இயந்திரம் பெறபெண்கள் விண்ணப்பிக்கலாம்

அரசால் இலவசமாக வழங்கப்படும் தையல் இயந்திரத்தைப் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜூலை, 2021 at 1:36 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:06 AM

அரசால் இலவசமாக வழங்கப்படும் தையல் இயந்திரத்தைப் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் விதவை, கணவனால் கைவிடப்பட்டவா், ஆதரவற்றோா், மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. தகுதியானா்கள் விண்ணப்பத்துடன் வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, தையல் பயிற்சி, வயது சான்று, ஜாதிச் சான்று நகல், பாஸ்போா்ட் அளவு வண்ண புகைப்படம் 2, விதவை, கணவனால் கைவிடப்பட்டவா், ஆதரவற்ற மகளிா், மாற்றுத் திறனாளி பெண் என்பதற்கான சான்று நகல், ஆதாா் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.

Advertisement

விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா் அல்லது ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஜூலை 31ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.