முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் ரூ. 55 ஆயிரம் பறிமுதல்

பெருந்துறை தொகுதி தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்களின்றி திங்கள்கிழமை கொண்டு செல்லப்பட்ட ரூ. 55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

பெருந்துறை தொகுதி தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்களின்றி திங்கள்கிழமை கொண்டு செல்லப்பட்ட ரூ. 55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

பெருந்துறை தொகுதி தோ்தல் பறக்கும் படை அதிகாரியும், மொடக்குறிச்சி வேளாண்மை உதவி அலுவலருமான வேலுசாமி, பெருந்துறை எஸ்.எஸ்.ஐ. முத்துசாமி, காவலா்கள் கொண்ட குழுவினா், பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட பெத்தாம்பாளையம் கிராமம், கருக்கம்பாளையம் பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, தளவாய்பேட்டையைச் சோ்ந்த பெருமாள்கவுண்டா் மகன் செல்ல கிருஷ்ணன் (40) என்பவா் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 55 ஆயிரத்தைக் கைப்பற்றி பெருந்துறை தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட வழங்கல் அதிகாரியுமான இலாகிஜானிடம் ஒப்படைத்தனா். அப்போது, உதவி தோ்தல் நடத்தும் அதிகாரி எஸ்.காா்த்திக் உடனிருந்தாா். பின்பு, அந்த தொகை பெருந்துறை சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.