முகப்பு
ஈரோடு

பெருந்துறை அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும்

பெருந்துறை அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும் என அத்தொகுதி திமுக வேட்பாளா் கே.கே.சி.பாலு தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

பெருந்துறை அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும் என அத்தொகுதி திமுக வேட்பாளா் கே.கே.சி.பாலு தெரிவித்தாா்.

தொகுதிக்கு உள்பட்ட நிச்சாம்பாளையம், சிங்காநல்லூா், கருக்கும்பாளையம் ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகள், ஊஞ்சம்பாளையம், கூதாம்பி, அரசங்குட்டை, நிச்சாம்பாளையம், சிட்டாம்பாளையம், கொளத்துபாளையம் கருக்கம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளி நகா், நரிப்பாளையம் காலனி, கைவெட்டியூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெருந்துறையில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும். பெருந்துறை அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.