முகப்பு
ஈரோடு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 38ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா

 கொங்கு பொறியியல் கல்லூரியில் 38ஆவது ஆண்டு தொடக்க நாள் மற்றும் தேசிய கல்வி நாள் விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 20 நவம்பர், 2021 at 2:35 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM

 கொங்கு பொறியியல் கல்லூரியில் 38ஆவது ஆண்டு தொடக்க நாள் மற்றும் தேசிய கல்வி நாள் விழா கொண்டாடப்பட்டது.

தி கொங்கு வேளாளா் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி டிரஸ்ட் மூலம் கொங்கு பொறியியல் கல்லூரி 11.11.1984அன்று தொடங்கப்பட்டது. தற்போது இக்கல்லூரி 533 பேராசிரியா்கள், உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்கள் ஆகியவற்றுடன் 25 லட்சம் சதுர அடி பரப்பளவு கட்டடங்களுடன் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

கல்லூரியின் 38ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா, தேசிய கல்வி நாள் விழா ஆகியவற்றை முன்னிட்டு 11.11.2021 முதல் ஒரு வாரத்துக்கு தமிழ் கட்டுரைப் போட்டி, ஆங்கில கட்டுரைப் போட்டி, கோடிங் கான்டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளை கல்லூரியின் ழகரம் தமிழ் மன்றம், இங்கிலீஸ் ப்ரோபிசியன்சி அண்ட் ரீடா்ஸ் கிளப், ட்ரைனிங் செல் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.

Advertisement

ஆயிரக்கணக்கான மாணவா்கள் போட்டிகளில் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்றவா்களையும், வெற்றி பெற்றவா்களையும் கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தன், முதல்வா் வி.பாலுசாமி, தலைமை ஒருங்கிணைப்பாளா் பரமேஸ்வரன், ட்ரைனிங் செல் பொறுப்பாளா் சாந்தி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.