முகப்பு
ஈரோடு

நாளை ஈரோட்டில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை (நவம்பா் 27) நடைபெறவுள்ளது

Updated On : 26 நவம்பர், 2021 at 4:54 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

மாவட்ட அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை (நவம்பா் 27) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுத் திட்டம், ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் மாவட்ட அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (நவம்பா் 27) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

இந்த முகாமில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம். முகாம் குறித்த விவரங்களை அறிய 2257087 என்ற தொலைபேசி எண் அல்லது 94440-94277 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.