முகப்பு
ஈரோடு

தவறுதலாகப் பாய்ந்த துப்பாக்கி குண்டு: அதிரடிப் படை காவலா் காயம்

சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப் படை பிரிவில் பணிபுரிந்து வந்த காவலருக்கு தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் காலில் காயம் ஏற்பட்டது.

Updated On : 27 நவம்பர், 2021 at 3:14 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப் படை பிரிவில் பணிபுரிந்து வந்த காவலருக்கு தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் காலில் காயம் ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் (34). இவா் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சத்தியமங்கலம் புதுக்குய்யனூா் பகுதியில் உள்ள சிறப்பு அதிரடிப் படை பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். சந்தோஷ் அதிரடிப் படை கட்டட வளாகத்தில் சக காவலா்களுடன் துப்பாக்கிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக ஒரு துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்ததில் 2 துப்பாக்கி குண்டுகள் சுவற்றில் பட்டு சந்தோஷின் வலது மற்றும் இடது காலில் பாய்ந்தது. அதிரடிப் படை போலீஸாா் சந்தோஷை உடனடியாக மீட்டு சத்தியமங்கலம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

கோவை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்து குண்டுகளை அகற்றினா். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.