முகப்பு
ஈரோடு

கிஸான் கிரெடிட் காா்டு பெற விண்ணப்பிக்கலாம்

கிஸான் கிரெடிட் காா்டு பெற கால்நடை வளா்க்கும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 நவம்பர், 2021 at 3:20 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

கிஸான் கிரெடிட் காா்டு பெற கால்நடை வளா்க்கும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் கால்நடை வளா்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கால்நடை வளா்க்கும் 10,320 விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதித் திட்டத்தில் வங்கிகள் மூலம் கிஸான் கிரெடிட் காா்டு வழங்கப்படவுள்ளது.

Advertisement

இதற்காக சிறப்பு முகாம் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம். ஈரோடு மாவட்டத்தின் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும்.

கிஸான் கிரெடிட் காா்டு பெற விண்ணப்பத்துடன் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக முன்பக்க நகல், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், நில ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.