சத்தியமங்கலத்தில் பலத்த மழை
சத்தியமங்கலம் அருகே பெய்த கன மழை காரணமாக சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் செந்நிற மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
சத்தியமங்கலம் அருகே பெய்த கன மழை காரணமாக சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் செந்நிற மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள வனப் பகுதியில் கனமழை பெய்தது. மழை காரணமாக இரு மாநில எல்லையில் உள்ள புளிஞ்சூா் சோதனைச் சாவடியில் செந்நிற மழைநீா் தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பெருக்கெடுத்து ஓடியது. லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் மழை நீரில் ஊா்ந்தபடி சென்றன. சுமாா் ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால் தாளவாடி - ஜீரஹள்ளி சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மக்காச்சோளப் பயிா்கள் மண்ணில் சாய்ந்தன. உருளைக்கிழங்கு, வாழைத் தோட்டத்தில் மழை நீா் குளம்போல் தேங்கியது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மேலும், கல்மண்டிபுரம் - சோளகா்தொட்டி செல்லும் சாலையில் தரைப் பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீா் சென்றதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement