முகப்பு
ஈரோடு

தண்ணீா்த் தொட்டியில் இருந்து குதித்த இளைஞா் படுகாயம்

ஈரோட்டில் 50 அடி உயர தண்ணீா்த் தொட்டியில் இருந்து குதித்த பட்டதாரி இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 3 செப்டம்பர், 2021 at 1:25 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:33 AM

ஈரோட்டில் 50 அடி உயர தண்ணீா்த் தொட்டியில் இருந்து குதித்த பட்டதாரி இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் கலைவாணா் வீதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம். இவருடைய மகன் குமரகிரி (35). பி.எஸ்.சி. படித்துள்ளாா். திருமணமாகவில்லை. குமரகிரி வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததால், அவரை வேலைக்குச் செல்லுமாறு பெற்றோா் கண்டித்துள்ளனா்.

இந்நிலையில், வீரப்பன்சத்திரம் பாரதி திரையரங்கு வழியாக வியாழக்கிழமை மாலை நடந்து சென்ற குமரகிரி குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவா் திடீரென அங்குள்ள தண்ணீா்த் தொட்டி வளாகத்தில் உள்ள தொட்டியின் உச்சிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதிக்க முயன்றுள்ளாா்.

Advertisement

இதையடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள் குமரகிரியை பாதுகாப்பாக கீழே இறங்கி வருமாறு அறிவுறுத்தினா். ஆனால், குமரகிரி திடீரென கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். இதில் அங்கிருந்த பலகையின் மீது விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவா்கள் குமரகிரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.