தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு
சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தனியாா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டதன்பேரில், சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்துத் துறை, காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். பள்ளி வாகனங்களில் விபத்து ஏற்படும் நேரத்தில் பயன்படுத்தப்படும் அவசரகால வழி சரியாக உள்ளதா எனவும், வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஜிபிஆா்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதா எனவும், மேலும் சிசிடிவி கேமராக்கள், தீயணைப்புக் கருவிகள் சரியாக இயங்குகிறதா எனவும் வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநா்களிடம் வாகனங்களை மித வேகத்தில் இயக்க வேண்டும், ஒவ்வொரு வாகனத்திலும் நடத்துநா் உரிமம் பெற்ற நபா் இருக்க வேண்டும், பள்ளி மாணவ, மாணவியா் வாகனங்களில் ஏறும்போதும், இறங்கும்போதும் ஓட்டுநா்கள் பொறுமையாக கவனித்து பின்னா் வாகனங்களை இயக்க வேண்டும் என ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தினா். சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
Advertisement