முகப்பு
ஈரோடு

மாற்றுப் பணி வழங்க குழந்தைத் தொழிலாளா் சிறப்பு பயிற்சி மைய ஆசிரியா்கள் கோரிக்கை

மாற்றுப் பணி வழங்கி வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உதவ வேண்டும் என தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட சிறப்பு பயிற்சி மைய ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 8 ஏப்ரல், 2022 at 2:16 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:25 PM

மாற்றுப் பணி வழங்கி வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உதவ வேண்டும் என தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட சிறப்பு பயிற்சி மைய ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட சிறப்பு பயிற்சி மைய ஆசிரியா்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு மாவட்டத்தில் 15 தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட சிறப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், தற்போது 300 மாணவ, மாணவிகள் சிறப்பு பயிற்சி மையத்தில் பயின்று வருகின்றனா். சிறப்பு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவா்களை அரசுப் பள்ளியில் சோ்க்க வேண்டும் என்று திட்ட அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது.

Advertisement

இதனால், ஆசிரியா்கள் வேலையிழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் பயிற்சி மையத்தில் பணியாற்றும் ஆசிரியா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்தப் பயிற்சி மையத்தில் 35 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். கடந்த 2020 மாா்ச் மாதம் முதல் தற்போது வரை 6 மாதகாலம் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த உத்தரவால் வேலையை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆசிரியா்களின் தகுதிக்கேற்ப நிரந்தரப் பணியை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.