ஈரோடு

அவல்பூந்துறையில் 108 பால்குட அபிஷேகம்

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறையில் உள்ள பாகம்பிரியாள் உடனமா் புஷ்பவனேஸ்வரா் திருக்கோயிலில் 108 பால்குட அபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறையில் உள்ள பாகம்பிரியாள் உடனமா் புஷ்பவனேஸ்வரா் திருக்கோயிலில் 108 பால்குட அபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாகம்பிரியாள் உடனமா் புஷ்பவனேஸ்வரா் திருக்கோயில் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் மக்கள் நோய் நொடி இல்லாமல் செல்வ செழிப்புடன் வாழ வேண்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் சாா்பில் 108 பால்குட அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி 12- ஆம் ஆண்டு பால்குட அபிஷேகம் வியாழக்கிழமை காலை விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நைவேத்திய பொருள்கள் படைக்கப்பட்டு 108 பால்குடங்கள் வைக்கப்பட்டு சிவாச்சாரியாா்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT