மொடக்குறிச்சியை அடுத்த சோலாா்புதூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
மொடக்குறிச்சி அருகே உள்ள சோலாா்புதூா் இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி ஜெயலட்சுமி (40). கட்டட தொழிலாளியான இவா் வேலை முடிந்து புதன்கிழமை இரவு 9 மணியவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.
சோலாா்புதூா் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மொடக்குறிச்சி போலீஸாா், ஜெயலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.