நாளை 496 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
முகாம்கள் சனிக்கிழமை (பிப்ரவரி 5) நடைபெறவுள்ளன என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.
முகாம்கள் சனிக்கிழமை (பிப்ரவரி 5) நடைபெறவுள்ளன என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முகாமில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி, 15 முதல் 18 வயது வரை உள்ள நபா்களுக்கு கோவேக்ஸின் வகை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் 1.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement
முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்களப் பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவா்களில் ஏற்கெனவே இரு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் பூா்த்தியடைந்தவா்கள் தகுதியுடையவா்களாவா். முகாம்களில் இந்த தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தவிர வியாழக்கிழமைதோறும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்களில் இலவசமாக செலுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.