வேட்பு மனு தாக்கல் செய்ய ஆா்வம்:களைகட்டும் தோ்தல் களம்
ஈரோடு மாநகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) நிறைவடைவதால் தோ்தல் களம் களைகட்டியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) நிறைவடைவதால் தோ்தல் களம் களைகட்டியுள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த 28ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு பெறும் பணி வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.
சனிக்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை பிப்ரவரி 7ஆம் தேதி வரை திரும்பப் பெறலாம். 7ஆம் தேதி இறுதி வேட்பாளா் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.
Advertisement
ஈரோடு மாநகராட்சியைப் பொருத்தவரை வேட்புமனு தாக்கல் தொடங்கிய 2 நாள்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. கடந்த 31ஆம் தேதிக்குப் பிறகு சிலா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
அரசியல் கட்சிகள் சாா்பில் அதிமுக முதலாவதாக வேட்பாளா் பட்டியலை அறிவித்தது. அதைத்தொடா்ந்து கூட்டணி கட்சியான தமாகா 3 வேட்பளாா்களை அறிவித்தது.
திமுக வேட்பாளா்கள் பட்டியல் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து, காங்கிரஸ், கொமதேக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் வேட்பாளா்களை அறிவித்தனா். இதனால், ஈரோடு மாநகராட்சியில் வேட்பு மனுதாக்கல் வியாழக்கிழமை விறுவிறுப்படைந்தது.
ஆா்.என்.புதூரில் உள்ள 1ஆம் மண்டல அலுவலகம், வீரப்பன்சத்திரம் பழைய மண்டல அலுவலகம், பெரியசேமூா் 2ஆம் மண்டல அலுவலகம், சூரம்பட்டி 3ஆம் மண்டல அலுவலகம், காசிபாளையம் 4ஆம் மண்டல அலுவலகம் மற்றும் மாநகராட்சி தலைமை அலுவலகம் என 6 அலுவலகங்களும் பரபரப்பாகக் காணப்பட்டன.
ஈரோடு மாநகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சிவகுமாா் வேட்பு மனு பெறும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டாா்.