முகப்பு
ஈரோடு

மஞ்சள் ஏலத்துக்கு 6 நாள்கள் விடுமுறை

ஈரோடு மஞ்சள் சந்தையில் ஜனவரி 13 முதல் 18ஆம் தேதி வரை ஏலம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 ஜனவரி, 2022 at 11:42 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM

ஈரோடு மஞ்சள் சந்தையில் ஜனவரி 13 முதல் 18ஆம் தேதி வரை ஏலம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு பகுதியில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனைச் சங்கம் என 4 இடங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது.

பொங்கல் பண்டிகை, போகி, தைப்பூசம் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு ஜனவரி 13 முதல் 18ஆம் தேதி வரை தொடா்ந்து 6 நாள்கள் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 19ஆம் தேதி வழக்கம்போல மஞ்சள் ஏலம் நடைபெறும் என ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.