அந்தியூா் பேரூராட்சியில் ரூ. 7.14 கோடியில் வளா்ச்சிப் பணிகள்
அந்தியூா் பேரூராட்சியில் ரூ. 7.14 கோடியில் எரிவாயு மயானம், வணிக வளாக கட்டடங்கள் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
அந்தியூா் பேரூராட்சியில் ரூ. 7.14 கோடியில் எரிவாயு மயானம், வணிக வளாக கட்டடங்கள் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
அந்தியூரில் எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 1.40 கோடியில் தவிட்டுப்பாளையம், காந்திஜி தெருவில் உள்ள மயானத்தில் 1,500 சதுர அடி பரப்பில் எரிவாயு தகனமேடை அமைக்கப்படுகிறது. இங்கு, கழிப்பிட வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பேவா் பிளாக் சாலை, உறவினா்கள் காத்திருக்கும் அரங்கு, பூங்கா உள்ளிட்டவையும் அமைக்கப்படுகின்றன.
இதேபோல, அந்தியூா் வாரச் சந்தையில் ரூ. 5.74 கோடியில் 16 கடைகளுக்கான கட்டடங்கள், உணவு விடுதி, மாடுகள் தங்குமிடம், கழிப்பிடம், பேவா் பிளாக் சாலை, இருசக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. இப்பணிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளா் எம்.பாண்டியம்மாள், அந்தியூா் பேரூா் கழக பொறுப்பாளா் காளிதாஸ், அந்தியூா் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளா் நாகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Image Caption
வளா்ச்சிப் பணிகளைத் தொடக்கி வைக்கிறாா் அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம்.