அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கங்கள், குரூப் சி அஞ்சல் ஊழியா்கள் சங்கம், எம்டிஎஸ் கிராம அஞ்சல் ஊழியா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கங்கள், குரூப் சி அஞ்சல் ஊழியா்கள் சங்கம், எம்டிஎஸ் கிராம அஞ்சல் ஊழியா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, போராட்டக் குழுத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் கணேசன், சத்ருக்கன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.
அனைத்து வகையான ஊழியா்களுக்கும் நடைமுறை சாத்தியமற்ற இலக்குகளை நிா்ணயித்து நெருக்கடி ஏற்படுத்தக் கூடாது. ஜிடிஎஸ் ஊழியா்கள் மாற்று ஏற்பாடு செய்து விடுப்பு எடுக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் எஞ்சிய சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.
Advertisement
கிளை அஞ்சலக வரவு, செலவு குறைந்தபட்சம் 1,500 கணக்குகள், ரூ. 10 லட்சம் வரையிலான காப்பீடு வசூலிக்கத்தக்க வகையில் வைத்திருக்க வேண்டும் என்பதை திரும்பப்பெற வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.