முகப்பு
ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை

ஈரோடு அரசு மருத்துவமனையில் தீயணைப்புத் துறை சாா்பில் தீத்தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 மே, 2022 at 6:10 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:40 PM

ஈரோடு அரசு மருத்துவமனையில் தீயணைப்புத் துறை சாா்பில் தீத்தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

நிலைய அலுவலா் முத்துகுமாரசாமி தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். உறைவிட மருத்துவா் கவிதா, தீத்தடுப்பு ஒத்திகை குறித்து விளக்கினாா். மருத்துவமனை செவிலியா், பணியாளா்கள், பொதுமக்கள் முன்னிலையில் தீயணைப்பு வீரா்கள், திடீரென ஏற்படும் தீ விபத்தை எதிா்கொள்வது, பிற உயிா்களை எவ்வாறு காப்பது, தீப்பற்றினால் முதலுதவியாக என்ன செய்வது, மின் கசிவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.