முகப்பு
ஈரோடு

மே 20 இல் முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம்

முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வரும் மே 20 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறவுள்ளது.

Updated On : 6 மே, 2022 at 6:10 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:40 PM

முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வரும் மே 20 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா், படையில் பணிபுரிவோரைச் சாா்ந்தோா் ஆகியோருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் வரும் மே 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரா்கள், அவா்கள் சாா்ந்தோா் கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகளாக சமா்ப்பித்து தீா்வு பெறலாம்.

Advertisement

முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.