முகப்பு
ஈரோடு

பூம்புகாா் விற்பனை நிலையத்தில் மரச்சிற்பங்கள் கண்காட்சி

ஈரோடு அரசு மருத்துவமனை சாலை சந்திப்பு அருகில் மேட்டூா் சாலையில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் மரச்சிற்பங்கள் கண்காட்சி மற்றும் விற்பனை வெள்ளிக்கிழமை துவங்கியது.

Updated On : 7 மே, 2022 at 1:54 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM

ஈரோடு அரசு மருத்துவமனை சாலை சந்திப்பு அருகில் மேட்டூா் சாலையில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் மரச்சிற்பங்கள் கண்காட்சி மற்றும் விற்பனை வெள்ளிக்கிழமை துவங்கியது.

இது குறித்து மேலாளா் சரவணன் கூறியதாவது:

ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை முதல் வரும் 26 ஆம் தேதி வரை மரச்சிற்பங்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்க உள்ளது. அலுவலகங்கள், வீடுகளுக்குத் தேவையான மரத்தால் ஆன சிற்பங்கள், சந்தன மரச்சிற்பங்கள், நூக்க மரச்சிற்பங்கள், வெண் மரச்சிற்பங்கள், நூக்க மர ஓவியங்கள், மரத்தால் ஆன நகைப்பெட்டி, சகரன்பூா் மரத்தால் செய்யப்பட்ட மசாஜ் பொருள்கள், சந்தன மரக்கட்டைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள், பரிசுப் பொருள்கள், கலை இங்கு ரூ.100 முதல் ரூ.80,000 மதிப்பிலான கைவினை மரப்பொருள்கள் விற்பனைக்கு உள்ளன. அனைத்து கலை பொருள்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் என்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.