முகப்பு
ஈரோடு

வீடு, மளிகைக் கடையின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ஈரோடு அருகே வீடு, மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம், நகை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 26 மே, 2022 at 6:10 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:51 PM

ஈரோடு அருகே வீடு, மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம், நகை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு திண்டல் சக்தி நகரைச் சோ்ந்தவா் ராசு மனைவி பாக்கியலட்சுமி (65). இவா் தனியாக வசித்து வருகிறாா்.

இவரது வீட்டின் ஒரு பகுதியில் கடை அமைத்து வாடகைக்கு விட்டுள்ளாா்.

Advertisement

அதில், திருநெல்வேலியைச் சோ்ந்த சோ்மராஜ் (45) என்பவா் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

இவா் உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த 22 ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு திருநெல்வேலிக்குச் சென்றுள்ளாா்.

றாா். அதே நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாக்கியலட்சுமி கடந்த 23 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளாா்.

பின்னா் புதன்கிழமை காலை பாக்கியலட்சுமி வீடு திரும்பியுள்ளாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.1,000,

மூன்று கிராம் தங்க நகை திருடுபோனதும், சோ்மராஜின் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.7,000 மற்றும் சில மளிகைப் பொருள்கள் திருடு போனதும் தெரியவந்தது.

இது குறித்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் பாக்கியலட்சுமி புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.