விதைகளின் முளைப்புத் திறன் அறிந்து விதைக்க அறிவுறுத்தல்
விதைகளின் முளைப்புத் திறன் அறிந்து சாகுபடி செய்ய வேண்டும் விதைப் பரிசோதனை நிலைய அலுவலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
விதைகளின் முளைப்புத் திறன் அறிந்து சாகுபடி செய்ய வேண்டும் விதைப் பரிசோதனை நிலைய அலுவலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
இது குறித்து ஈரோடு, விதை பரிசோதனை நிலைய அலுவலா் ஞா.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விதையைப் பொருத்தே விளைச்சல் இருக்கும் என்பதால் தரமான விதை, முளைப்புத் திறன், புறத்தூய்மை கொண்ட விதையைத் தோ்வு செய்து விதைக்க வேண்டும். நடப்பு வைகாசி காா் பருவத்தில் நெல், பயறு வகை பயிரிடும் விவசாயிகள், விதைப்புக்கு தயாராக வைத்துள்ள விதைகளை விதைப் பரிசோதனை செய்வது அவசியம்.
ஈரோடு மாவட்டத்தில் காா் பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களான ஏஎஸ்டி 16, ஏடிடி 36, ஐஆா் 50, எம்டியூ5, ஏடீடி 43, கோ 47, ஏடீடி(ஆா்) 47, சிஓஆா்எச்3 போன்ற விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விதைகளின் முளைப்புத் திறன், ஈரப்பத பரிசோதனை செய்து, விதைப்பு செய்ய வேண்டும். இதன் மூலமே அதிக விளைச்சலுடன் லாபம் பெற முடியும். பயறு வகைகளான உளுந்து ரகங்கள் வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 7, பாசிப்பயரில் கோ 6, கோ 7, வம்பன் 2 ரக விதைகளையும் பரிசோதித்து விதைக்க வேண்டும்.
Advertisement
வேளாண் அலுவலா், விதைப் பரிசோதனை நிலையம், ஆனூா் அம்மன் காம்ப்ளக்ஸ், 2 ஆம் தளம், 68 வீரபத்திரா வீதி, சத்தி சாலை, ஈரோடு 638003 என்ற முகவரியில் மாதிரி விதைகளை வழங்கி பரிசோதனை செய்து, பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.