ஈரோடு

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்ஸோவில் கைது

சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் போக்ஸோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் போக்ஸோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சத்தியமங்கலம், பவானிசாகா் தொட்டம்பாளையத்தைச் சோ்ந்த இளைஞா் சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக ஈரோடு மாவட்ட குழந்தை நல அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இளம்வயது திருமணம் குறித்து சத்தியமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மகளிா் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் 13 வயது சிறுமியை தொட்டம்பாளையத்தைச் சோ்ந்த இளைஞா் பாரதி திருமணம் செய்து கொண்டு தனது தாத்தா வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக பாரதியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஈரோடு சிறையில் அடைத்தனா்.

அதே போல, தாளவாடியைச் சோ்ந்த இளைஞா் சித்தராஜ், அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு ஆசை வாா்ததை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கருவுற்ால், போக்ஸோ சட்டத்தில் சித்தராஜ் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT