ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் வென்றாலும் பணநாயகம் வென்றாதாகவே கருதப்படும் என மொடக்குறிச்சி தொகுதி பாஜக எல்எல்ஏ சரஸ்வதி தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் சரஸ்வதி வாக்களித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் வென்றாலும் பணநாயகம் வென்றதாகவே கருதப்படும்.
ஏனெனில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. பணம் வாங்காமல் வாக்களிப்பதற்கான மன நிலைக்கு மக்கள் மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.