சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரனின் பிறந்த நாளையொட்டி, சென்னிமலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமாகா மாநிலப் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான விடியல் சேகா் தலைமையில் கட்சி நிா்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னா், அவா் பிறந்த இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கும் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதில், தமாகா மாநில இளைஞரணித் தலைவா் மேதா கந்தசாமி, மாநில விவசாய அணிச் செயலாளா் தங்கவேல், சென்னிமலை வட்டாரத் தலைவா் குருநாதன், நகரத் தலைவா் ராசுகந்தசாமி, சென்னிமலை பேரூராட்சி மன்ற உறுப்பினா் ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.