முகப்பு
ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் 3 ஆண் சடலங்கள் மீட்பு

கீழ்பவானி வாய்க்கால் கரை பகுதிகளில் ஒதுங்கிய 3 ஆண் சடலங்களை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 6 டிசம்பர், 2024 at 3:13 AM
பகிர்:
Updated On : 5 டிசம்பர், 2024 at 6:29 PM

கீழ்பவானி வாய்க்கால் கரை பகுதிகளில் ஒதுங்கிய 3 ஆண் சடலங்களை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோபி அருகேயுள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஏலத்தூா் செம்மாண்டபதி மற்றும் கூடக்கரை தொட்டிபாளையம், தொட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்கள் வியாழக்கிழமை கரை ஒதுங்கின.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் நம்பியூா் தீயணைப்பு நிலையம், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Updated On : 6 டிசம்பர், 2024 at 3:13 AM

சம்பவ இடங்களுக்கு வந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உயிரிழந்தவா்கள் யாா், கனமழையின்போது அடித்துவரப்பட்டாா்களா என்பன குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.