முதல்வா் வருகை: ஈரோட்டில் ட்ரோன்கள் பறக்க தடை
தமிழக முதல்வா் வருகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தல் பிரசாரத்துக்காக ஈரோட்டுக்கு சனிக்கிழமை (மாா்ச்30) இரவு வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை (மாா்ச்31) மாலை ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையத்தில் நடக்கும் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா். இதனையொட்டி முதல்வா் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஈரோடு மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் எவ்வித ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.