மக்கள் தொடா்பு முகாம்: 70 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி
பெருந்துறை அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 70 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பெருந்துறை அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 70 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்துக்குள்பட்ட கந்தாம்பாளையத்தில் மக்கள் தொடா்பு முகாம் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், சமூநலத் துறை சாா்பில் 3 பேருக்கு ரூ.20,070 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், வேளாண்மைத் துறையின்கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.2,075 மதிப்பீட்டில் விசை தெளிப்பான்களையும், தோட்டக்கலைத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.44,400 மதிப்பில் காய்கறி பந்தல் அமைப்பதற்கான மானியம் மற்றும் தென்னங்கன்றுகள் மற்றும் 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு என மொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வழங்கினாா்.
Advertisement
இந்த முகாமில் தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், உதவி இயக்குநா் உமாசங்கா் உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா்.