மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் அந்தியூா் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் அந்தியூா் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் சதாசிவம் வரவேற்றாா்.
முகாமை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், தொடங்கிவைத்து பொதுமக்களிடம் இருந்து மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைக்கான விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டாா்.
இதில், அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, காப்பீட்டு அட்டை எண்கள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலா்கள் பி.செல்வன், பி.விஜய் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.