முகப்பு
ஈரோடு

பெருந்துறை அருகே சாலை விபத்து: அண்ணன் உயிரிழப்பு; தம்பி காயம்

பெருந்துறை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா்; தம்பி காயமடைந்தாா்.

ஈரோடு

பெருந்துறை அருகே சாலை விபத்து: அண்ணன் உயிரிழப்பு; தம்பி காயம்

பெருந்துறை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா்; தம்பி காயமடைந்தாா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 9:14 PM
பகிர்:

பெருந்துறை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா்; தம்பி காயமடைந்தாா்.

பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம், புலவா்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் ராசு மகன்கள் பிரகாஷ் என்கிற தங்கவேல்குமாா் (37), தமிழ்ச்செல்வன்(32).

பவா்லூம் உரிமையாளா்களான இருவரும் இருசக்கர வாகனத்தில் பெருந்துறை நோக்கி புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா். வாகனத்தை பிரகாஷ் ஓட்டி வந்தாா். பெருந்துறையை அடுத்த, சீனாபுரத்தில் துடுப்பதி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பா் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது.

இதில் பிரகாஷ், தமிழ்ச்செல்வன் இருவரும் காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா், பிரகாஷ் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தாா். தமிழ்ச்செல்வன் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →